கங்கார்: ஒரு தொழிற்சாலைக்கு எதிரே உள்ள பழத்தோட்டத்தில் கடந்த வாரம் ஒரு சாக்குப்பைக்குள் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மனிதருடையது என காவல்துறை உறுதி செய்துள்ளது. இறந்தவரை அடையாளம் காணும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகவும், இதில் ஏதேனும் சதி உள்ளதா என விசாரித்து வருவதாகவும் கங்கார் காவல் நிலையத் தலைவர் யுஷரிஃபுதீன் யூசோப் கூறினார்.
கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு மனிதருடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் விசாரணைகள் தொடர்கின்றன என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஜூலை 26 அன்று, தனது பழத்தோட்டத்தில் களைக்கொல்லி தெளித்துக் கொண்டிருந்தபோது சாக்குப்பையைக் கண்டெடுத்த ஒருவரிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.



