Last Updated:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற இந்திய அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதம் உள்ளன. இதில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும் பிரபல வர்ணனையாளருமான தீப் தாஸ்குப்தா கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்திய அணி, ஆகஸ்ட் 15 முதல் 29 வரை இலங்கையில் கல்லே மற்றும் கொழும்பு நகரங்களில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்திய பந்துவீச்சை விட சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக திரும்பும் மைதானங்களில் இந்திய பேட்டர்கள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பதே அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உள்நாட்டில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான தொடர்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்டர்கள் கடுமையாகத் திணறினர். எனவே, இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களை அவர்களின் சொந்த மண்ணில் எதிர்கொள்வது இந்திய பேட்டிங் வரிசைக்கு பெரும் சோதனையாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற இந்திய அணிக்கு இன்னும் 9 போட்டிகள் மீதம் உள்ளன. (ஆஸ்திரேலியாவுடன் 5, இலங்கையுடன் 2, நியூசிலாந்துடன் 2). இதில் தோராயமாக 7 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா உள்ளது. எனவே, எந்தவொரு அணியையும் அல்லது தொடரையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இதனால் இலங்கையின் சுழற்பந்து வீச்சு மைதானங்களில் இந்திய அணி என்ன மாதிரியான வியூகங்களுடன் களம் இறங்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.


