• Login
Saturday, August 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கும்மிடிப்பூண்டி செக் போஸ்ட்டில் மர்ம நபர் வசூல் வேட்டை! வீடியோ எடுத்த வடமாநில டிரைவர்! அலறிய நபர் | Lorry driver shoots a man who is fake officer getting bribes near checkpost

GenevaTimes by GenevaTimes
August 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கும்மிடிப்பூண்டி செக் போஸ்ட்டில் மர்ம நபர் வசூல் வேட்டை! வீடியோ எடுத்த வடமாநில டிரைவர்! அலறிய நபர் | Lorry driver shoots a man who is fake officer getting bribes near checkpost
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Saturday, August 1, 2026, 15:06 [IST]

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே லாரி டிரைவரிடம் அதிகாரி போல லஞ்சம் வசூலித்த நபரை வடமாநில டிரைவர் ஒருவர் துரத்தி துரத்தி வீடியோ எடுத்ததால் அவர் பணத்தை போட்டுவிட்டு தலைத்தெறிக்க ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடி வழியாக தினமும் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கும், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

thiruvallur lorry driver

இந்நிலையில் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் இல்லாத நேரத்தை நோட்டமிடும் சில தனிநபர்கள், அந்த நேரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லாரி ஓட்டுநர்களை வழிமறித்து அதிகாரிகள் போல நடித்து பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே வடமாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரிடம் தனிநபர் ஒருவர் பணம் வசூலிக்கும் காட்சியை, அந்த ஓட்டுநரே வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், பணம் வசூலித்த நபரை லாரி ஓட்டுநர் இந்தியில் திருடன், திருடன் என கத்திக் கொண்டு துரத்திச் செல்வதும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம்! செமயாக சிக்கிய போலீஸ்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்

கர்நாடகாவில் தமிழக லாரி டிரைவரிடம் லஞ்சம்! செமயாக சிக்கிய போலீஸ்.. கடைசியில் நடந்த தரமான சம்பவம்

ஒரு கட்டத்தில் அந்த நபர் ஆளைவிடுடா சாமி என சொல்லாத குறையாக காசை வீசிவிட்டு தப்பியோடினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு கும்மிடிப்பூண்டி எளாவூர் போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3.54 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுகல் செய்யப்பட்டன.

எளாவூர் சோதனை சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பக லஞ்சம் பெறப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் சென்றது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலையில் அந்த சோதனை சாவடியில் சோதனை செய்தனர்.

அப்போது சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ 3.54 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இந்த பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது.

விரட்டி விரட்டி லஞ்சம்.. ஸ்கெட்ச் போட்ட போலீஸார்.. சிக்கியும் 'எஸ்' ஆன இன்ஸ்பெக்டர்

விரட்டி விரட்டி லஞ்சம்.. ஸ்கெட்ச் போட்ட போலீஸார்.. சிக்கியும் ‘எஸ்’ ஆன இன்ஸ்பெக்டர்

அது போல் கடந்த ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் லாரிகளை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை குறி வைத்து சீருடை அணிந்த மர்ம நபர் அதிகார் போல் செயல்பட்டு டிரைவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்தாராம்.

இந்த நிலையில் வழக்கம் போல் லாரி டிரைவரை ரூ 2000 கேட்டு மிரட்டிய நிலையில், அந்த நபரிடம் அடையாள அட்டையை டிரைவர் கேட்ட போது, அந்த மர்மநபர் தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

உடனே சுதாரித்த டிரைவர், “திருடன், திருடன்” சப்தமிட்டதை அடுத்து அங்கிருந்த சக ஓட்டுநர்களும் பொதுமக்களும் சேர்ந்து அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் போலி அதிகாரியாக வலம் வந்து பலரிடம் மிரட்டி பணம் கேட்டது தெரியவந்தது.

English summary

A man acting as government officer near Gummidipoondi gets bribe from lorry drivers leaves north Indian driver suspicious and he gave complaint against him.

Read More

Previous Post

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : ஷானி, ரவி மீதும் சட்டநடவடிக்கை கோருகிறார் உதய கம்மன்பில

Next Post

காமன்வெல்த் 2026 : ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்.. தங்க வேட்டையில் இந்தியா.. | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

Next Post
காமன்வெல்த் 2026 : ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்.. தங்க வேட்டையில் இந்தியா.. | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

காமன்வெல்த் 2026 : ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள்.. தங்க வேட்டையில் இந்தியா.. | பிற விளையாட்டுகள் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin