Last Updated:
ஆகஸ்ட் 3 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை சந்திக்க இருந்த நிலையில், உரிய சூழல் வரும்போது சந்திக்கலாம் என கர்நாடாகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டிளித்தார்
“தற்போதைய சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா வர வேண்டாம்” என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி விவகாரம், தமிழ்நாடு – கர்நாடகா இடையே கடந்த சில நாட்களாக பூதாகரமாகியிருக்கிறது. தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களில் திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடவில்லை. இதனால் தமிழக முதல்வர் ஆகஸ்ட் 3-ந் தேதி பெங்களூரு சென்று கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசக் கூடும் என கூறப்பட்டது. இதற்கிடையே முதல்வர், கர்நாடகா செல்வதை தவிர்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசும்போது, “
“நாளை (ஆகஸ்ட் 1) நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். இரு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தற்போதைய அரசியல் சூழல் காரணமாகவும் தமிழக முதல்வர் தனது கர்நாடகப் பயணத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளவுள்ளேன்.
தமிழக முதல்-அமைச்சர் வரும்போது கர்நாடகாவில் போராட்டம் நடந்தால் சரியாக இருக்காது. எனவே கர்நாடகத்தில் சூழல் சரியில்லாததால் வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
“மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடமும் கர்நாடகத்தின் நிலைமையை எடுத்துரைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.” என்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.


