இளம் வயதினரிடம் வாகனங்களை ஒப்படைக்கும் போது பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இலங்கை காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டம் காரணமாக அண்மைக்காலமாக விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை இளைஞர்களை உள்ளடக்கியவையாக இருப்பதாகவும் காவல்துறை பேச்சாளர் உதவி அத்தியட்சகர் (ASP) எப்.யு. வூட்லர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இளம் வயதினருக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோர், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொறுப்பற்ற வாகன ஓட்டம்
அதிவேகப் பயணம் மற்றும் பொறுப்பற்ற வாகன ஓட்டத்தை சட்டங்கள் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இவ்விடயத்தில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

