• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || FIFA உலகக் கோப்பையைத் தனியார்மயமாக்கும் திட்டம்

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || FIFA உலகக் கோப்பையைத் தனியார்மயமாக்கும் திட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




ஃபிபா (FIFA) தலைவர் ஜியானி இன்பான்டினோ, உலகக் கோப்பைப் போட்டிகளில் கணிசமான பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்கள் வாங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், ‘ஃபிபா பார்வர்ட் என்டர்பிரைஸ்’ (Fifa Forward Enterprise) என்ற பெயரில் புதிய துணை நிறுவனம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.


இதுகுறித்த தகவல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (28) வெளியாயின. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டு பலன்களைப் பெறுவதற்கு பிபா அமைப்பில் உள்ள 211 உறுப்பு நாடுகளுக்கு 53 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ‘தி டைம்ஸ்’ (The Times) செய்தி வெளியிட்டுள்ளது.


கசிந்த கடிதம் ஒன்றின் மூலம், கால்பந்தின் மிகப்பெரிய திருவிழாவில் தனியார் முதலீட்டை அனுமதித்தால் உறுப்பு நாடுகளுக்குக் கிடைக்கும் நிதி ஊக்கத்தொகை குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தத் திட்டத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டால் 1,000 கோடி டாலர் (சுமார் 750 கோடி பவுண்டு) நிதித் தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஏற்காவிட்டால் 270 கோடி டாலர் (சுமார் 200 கோடி பவுண்டு) மட்டுமே வழங்கப்படும் என்றும் இன்பான்டினோ உறுப்பினர்களுக்குத் தெரிவித்துள்ளார்.


அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:


“இந்தத் திட்டத்துடன் தொடர்வதா இல்லையா என்ற முடிவு உங்களுடையது மட்டுமே.


நீங்கள் தொடர விரும்பினால், 2027 ஜனவரி 1,   முதல் இந்த 1,000 கோடி டாலர் நிதித் தொகுப்பு உங்களுக்குக் கிடைக்கும். இது நம் பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.


மாறாக, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீங்கள் விரும்பினால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 270 கோடி டாலர் மதிப்பிலான ‘பார்வர்ட்’ (Forward) மேம்பாட்டுத் திட்டம் தொடரும்.


2027 ஜனவரி 1  முதல் தொடங்கும் வரவிருக்கும் சுழற்சிக்கு, இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உறுப்பு நாடும் அதிகபட்சமாக 4,00,செக் (அல்லது 40 மில்லியன் டாலர்) வரை பெறும் வாய்ப்பைப் பெறும்.”


இன்பான்டினோவுக்கு தனிப்பட்ட பலன்கள்


செவ்வாய்க்கிழமை (28) வெளியிடப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, உலகக் கோப்பையைக் கண்காணிக்க ஒரு புதிய துணை நிறுவனம் உருவாக்கப்படும். அதில் தனியார் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க முடியும். இந்தத் திட்டம் நிறைவேறினால், தலைவர் இன்பான்டினோவுக்கே கணிசமான தொகையான போனஸ் கிடைக்கும் நிலை உள்ளது.


மேலும், 2031-ல் அவரது ஃபிபா பதவிக்காலம் முடிந்த பிறகு, புதிய அமைப்பின் ‘ஆணையராகவும்’ (Commissioner) அவர் பொறுப்பேற்கக்கூடும். இதன் மூலம் அவருக்கு மேலும் பல கோடி லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.


அமைப்புகளின் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும்


இந்தத் திட்டத்திற்குப் பல விளையாட்டு அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இங்கிலாந்து கால்பந்து சங்கம் (FA) வெளியிட்ட அறிக்கையில், வெளிப்படைத்தன்மை இல்லாதது “ஆழ்ந்த கவலை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.


அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:


“இந்தத் திட்டம் குறித்து நாங்கள் முன்கூட்டியே அறியவில்லை. இதன் உண்மையான நோக்கம் என்ன, என்ன நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன போன்ற எந்தவொரு முக்கிய விவரமும் எங்களிடம் தெரிவிக்கப்படவில்லை.


எங்களின் குறைந்த அளவிலான தகவல்களின் அடிப்படையில், இந்த முடிவை எட்டப் பின்பற்றப்பட்ட முறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் உள்ள வெளிப்படைத்தன்மையின்மையைக் கண்டு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்.


ஃபிபா உறுதியளித்தபடி, இந்தத் திட்டம் முழுமையாகவும் வெளிப்படையாகவும் பகிரப்படும்போது, ​​எங்கள் கருத்துகளை நாங்கள் தெளிவாகத் தெரிவிப்போம்.”


ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ‘யூஃபா’ (UEFA), கால்பந்தின் ஆன்மாவை விற்க முயல்வதாக ஃபிபாவைச் சாடியுள்ளது.


யூஃபா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


“இது கால்பந்தின் ஆளுமை நிறுவனங்கள் எப்போதுமே தாண்டக் கூடாத ஒரு எல்லையைக் கடந்துள்ளது. யூஃபா இதை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது.


ஒவ்வொரு தேசிய கால்பந்து சங்கமும் இதை கருத வேண்டும். லீக்குகள், கிளப்புகள், வீரர்கள், ஆதரவாளர்கள், அரசாங்கங்கள் மற்றும் விளையாட்டின் எதிர்காரியத்தில் அக்கறை கொண்ட அனைவரும் இதை எதிர்த்துப் பேச வேண்டும்.


கால்பந்தின் ஆன்மாவும் அதன் நிர்வாகமும் விற்பனைக்கான பொருட்கள் அல்ல; அதிலும் குறிப்பாக, யாருக்கு நிதி லாபம் கிடைக்கிறது என்ற எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இதைச் செய்வது ஏற்கத்தக்கதல்ல. நம்மில் யாரும் கால்பந்தின் சொந்தக்காரர்கள் அல்ல. இதை விற்பனை செய்வதற்கு ஃபிபாவுக்கு எந்த உரிமையும் இல்லை.”


இந்தத் திட்டம் நிறைவேறினால் உலகப் கோப்பையைப் புறக்கணிக்க ஐரோப்பிய நாடுகள் பரிசீலித்து வருவதாக ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ (Sky Sports) செய்தி வெளியிட்டுள்ளது.


வட மற்றும் மத்திய அமெரிக்கக் கால்பந்து கூட்டமைப்பான ‘கான்காஃகாப்’ (Concacaf), இந்தத் திட்டத்தில் நிலவும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் முறையான மேற்பார்வை இல்லாமை குறித்துத் தனது “ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்தியுள்ளது.


அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு:


“ஊடகச் செய்திகள் மூலமாகவும், அதன்பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு மூலமாகவுமே கான்காஃகாப் இந்த விவகாரத்தை அறிந்துக் கொண்டது. உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாதது எங்களை மிகவும் கவலைக்குள்ளாக்குகிறது.


உரிய நிர்வாக அமைப்புகளுடனும் பங்குதாரர்களுடனும் எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்துவதற்கு முன்பாக, இந்த அளவிலான திட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு பகிரப்பட்டிருப்பது எங்கள் பிராந்தியத்தைச் சேர்ந்த பலருக்கும் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.


கால்பந்து தலைவர்களாகிய நாங்கள் இந்த விளையாட்டின் பாதுகாவலர்கள் ஆவோம். ஃபிபா, கூட்டமைப்புகள் மற்றும் ஒவ்வொரு உறுப்பு நாடும் எப்போதும் விளையாட்டின் நலனுக்காகச் செயல்படும் பொறுப்பைக் கொண்டுள்ளன.


நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நல்ல நிர்வாகம், வலுவான செயல்முறைகள் மற்றும் நீண்டகாலப் பொறுப்புணர்வு ஆகியவற்றால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும்.”


 



Read More

Previous Post

கார் டிக்கியில் எடுத்த செல்ஃபி, பெற்றோரிடம் கந்து வட்டி கடனை அடைக்க பணம் பறிக்க மகன் நடத்திய கடத்தல் நாடகத்தை அம்பலப்படுத்தியது. – Malaysiakini

Next Post

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது! | வணிகச் செய்திகள்

Next Post
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது! | வணிகச் செய்திகள்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin