நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீட்டிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்துடன் அரசாங்கம் முன்னோக்கிச் செல்வதற்கு முன்னர், அது குறித்து இலங்கை வழக்கறிஞர் சங்கத்துடன் (BASL) கலந்தாலோசிக்கப்படவில்லை என்று அதன் தலைவர் ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வழக்கறிஞர் சங்கத்துடன் எத்தகைய முன்னாயத்தக் கலந்தாலோசனையும் இன்றி சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, BASL இன் பொது உறுப்பினர்களின் சிறப்புக் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமரசூரிய குறிப்பிட்டார்.
நீதிபதிகளின் ஓய்வூதிய வயது தொடர்பான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து புதுக்கடையில் உள்ள இலங்கை வழக்கறிஞர் சங்க தலைமையகத்தில் திரண்டிருந்த பெருந்திரளான உறுப்பினர்கள் மத்தியில் புதன்கிழமை (29) அன்றுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


