விபத்து நேரத்தில் பாராமோட்டரில் விமானியைத் தவிர, அரபு நாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.
பெந்தோட்ட கடற்பரப்பில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பாராமோட்டர் (மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்) விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து, இன்று புதன்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் பெந்தோட்ட கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்காக வான்வழி சாகசச் சவாரிகளை நடத்தி வந்த தனியார் நிறுவனம் ஒன்றின் பாராமோட்டர் இயந்திரக் கோளாறு காரணமாக பறந்து கொண்டிருந்தபோது, திடீரென கடலில் விழுந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நேரத்தில் பாராமோட்டரில் விமானியைத் தவிர, அரபு நாட்டைச் சேர்ந்தவர் என நம்பப்படும் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார்.
விபத்தில் விமானி உயிர் தப்பிய நிலையில், கடலில் விழுந்த பெண் சுற்றுலாப் பயணி முதலில் காணாமல் போயிருந்தார். பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவரது சடலம் பெந்தோட்ட கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் பெந்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

