தனது பள்ளியின் இரண்டாம் மாடியிலிருந்து நேற்று விழவிருந்த இரண்டாம் படிவ மாணவி, துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என்றும், அவருக்கு மனச்சிதைவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 14 வயதான அந்த மாணவிக்கு கடந்த மே மாதம் இந்த மனநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அவரது பெற்றோருக்கும் பள்ளிக்கும் அவரது நிலை குறித்துத் தெரியும் என்றும் திரெங்கானு காவல்துறைத் தலைவர் கைரி கைருதின் கூறினார்.
கோல திரெங்கானுவில் உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. அந்த மாணவி கடைசியாக ஜூலை 14 அன்று (தனது மனநோய்க்காக) சிகிச்சைக்காகச் சென்றார். மேலும் செப்டம்பர் 15 அன்று தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் அந்த மாணவி பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கிட்டத்தட்ட கீழே விழ இருந்தபோது அவரை ஒரு விளிம்பிலிருந்து மேலே இழுத்து காப்பாற்றினர். மன அழுத்தம் அல்லது மன உளைச்சலில் இருப்பவர்கள், அல்லது உணர்ச்சி ரீதியான பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவர்களிடம் உதவி நாடலாம் அல்லது 03-7627 2929 என்ற எண்ணில் பெஃப்ரெண்டர்ஸை (Befrienders) அணுகலாம்.



