Last Updated:
இஸ்ரேல் மற்றும் உக்ரைன் நாட்டு தலைவர்களுடனான அதிபர் டிரம்பின் சந்திப்புகள் எப்படி அமைந்தது என்பது பற்றி வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பேசியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடனான அதிபர் டொனால்டு டிரம்பின் சந்திப்புகள் பயனுள்ளதாக அமைந்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தித்துப் பேசினார். ஈரான் மீது போர் தொடங்கியபிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்துப் பேசினர்.
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலை, ஈரான் போரில் அடுத்தகட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. மேலும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் மற்றும் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆபிரகாம் உடன்படிக்கைகளின் விரிவாக்கம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசினார். இதில், அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடர்பாகவும், ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புத்துயிர் அளிப்பது குறித்தும் டிரம்புடன் ஆலோசித்ததாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் நாட்டு தலைவர்களுடனான அதிபர் டிரம்பின் சந்திப்புகள் சாதகமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) தெரிவித்துள்ளார்.
பெஞ்சமின் – நெதன்யாகு உடனான சந்திப்பு… பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? வெள்ளை மாளிகை தகவல்!

