Last Updated:
செஸ் ஒலிம்பியாட் மாதிரி சர்வதேச போட்டிகள் இந்தியாவில் இனி நிறைய நடக்கும். அதன் மூலம் இன்னும் நிறைய வீரர்கள் உருவாகுவார்கள்
தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் செஸ் விளையாட்டிற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டு போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் பிரக்ஞானந்தாவுக்கு, அவர் பயின்று வரும், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரக்ஞானந்தா, தான் படிக்கும் கல்லூரிலேயே தனக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது பெருமையாக உள்ளதாகக் கூறினார்.
வரும் செப்டம்பர் மாதம் உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட்டில் நிச்சயம் சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது-
ஃபிடே தலைவராக ஆனந்த் சார் தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது செஸ் ஒலிம்பியாட் மாதிரி சர்வதேச போட்டிகள் இந்தியாவில் இனி நிறைய நடக்கும். அதன் மூலம் இன்னும் நிறைய வீரர்கள் உருவாகுவார்கள் என நம்பிக்கை உள்ளது.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட்டில் சாம்பியன் பட்டத்தை தக்கவைப்போம் அதே அணி தான் எனவே நம்பிக்கை அதிகமாவே உள்ளது. பள்ளி கல்லூரிகளில் செஸ் விளையாட்டிற்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கிவிட்டனர் இதன் மூலம் நிறைய சாம்பியன்கள் உருவாகுவார்கள்.
படிக்கும் கல்லூரிலேயே பாராட்டுவிழா நடத்தியது பெருமையாக உள்ளது இதுபோன்ற நிகழ்வு மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். என்று தெரிவித்தார்.


