• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாதவிடாய் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி… மூலிகை நாப்கினால் பெண்களின் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 28, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மாதவிடாய் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி… மூலிகை நாப்கினால் பெண்களின் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 28, 2026 10:16 AM IST

தற்போது இந்தத் தொழிலின் மூலம் மாதம் சுமார் ரூ.25,000 வரை வருமானம் ஈட்டி, சுயசார்புடன் வாழ்ந்து வருகிறார்.

+

News18

News18

வாழ்க்கையில் தொடர்ச்சியான சவால்கள், உடல்நலப் பிரச்சனைகள், குடும்ப இழப்புகள் என பல்வேறு இன்னல்களைச் சந்தித்தபோதும் மனம் தளராமல், பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி மூலிகை நாப்கின்களை தயாரித்து தொழில்முனைவோராக வெற்றி நடைபோட்டு வருகிறார் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா. பெண்களின் நலனுக்காக அவர் மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ரேணுகா, மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பை (MLT) முடித்தவர். திருமணத்திற்குப் பிறகு உடலியல் சார்ந்த பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட அவர், குழந்தை பாக்கியத்திற்காக சுமார் ஐந்து ஆண்டுகள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டது. நீண்ட சிகிச்சைக்குப் பிறகே அவருக்கு குழந்தை பிறந்தது.

இந்த அனுபவம் அவருக்கு பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்து ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தனது மருத்துவ அறிவின் அடிப்படையில், சந்தையில் கிடைக்கும் வேதிப்பொருட்கள் கலந்த நாப்கின்கள் சில பெண்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை உணர்ந்தார். “நான் அனுபவித்த வேதனையை வேறு எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாது” என்ற எண்ணமே, பெண்களுக்குப் பாதுகாப்பான மாற்று தயாரிப்பை உருவாக்க வேண்டும் என்ற உறுதியை அவருக்குள் விதைத்தது.

இதற்கிடையில், தனது கணவரை இழந்த சோகமும் ரேணுகாவின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அந்த இழப்பில் முடங்காமல், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மூலிகை நாப்கின் தயாரிப்பு தொழிலில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார்.

ரேணுகா தயாரிக்கும் இந்த மூலிகை நாப்கின்களில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை. பாரம்பரிய மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை மூலிகைகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. வேம்பு மற்றும் நிலவேம்பு கிருமி நாசினியாகச் செயல்பட்டு தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. துளசி மற்றும் மஞ்சள் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவை என்பதால் சரும எரிச்சலைக் குறைக்க உதவுகின்றன. கற்றாழை உடலுக்கு குளிர்ச்சியையும், பயன்படுத்தும்போது மென்மையான உணர்வையும் வழங்குகிறது.

இந்தத் தொழிலைத் தொடங்குவதற்காக ரேணுகா, தனது தொழில் கூட்டாளியுடன் இணைந்து ரூ.25 லட்சம் முதலீடு செய்துள்ளார். தற்போது 6 நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டாக தயாரிக்கப்படும் இந்த தயாரிப்பு, XL அளவில் ரூ.130-க்கும், XXL அளவில் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடங்கிய இந்த முயற்சியை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் ஆன்லைன் விற்பனையையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். தற்போது இந்தத் தொழிலின் மூலம் மாதம் சுமார் ரூ.25,000 வரை வருமானம் ஈட்டி, சுயசார்புடன் வாழ்ந்து வருகிறார்.

“இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்படும் இந்த நாப்கின்கள், பெண்களின் மாதவிடாய் கால அசௌகரியங்களைக் குறைப்பதோடு, தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவும்” என்று ரேணுகா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். மேலும், இந்த தயாரிப்பைப் பயன்படுத்திய பல பெண்களும் நல்ல வரவேற்பையும், நேர்மறையான கருத்துகளையும் பகிர்ந்து வருவதாக அவர் கூறுகிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளையும் சவால்களையும் தன்னம்பிக்கையால் வென்று, பிற பெண்களின் ஆரோக்கியமான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் ரேணுகாவின் இந்த முயற்சி, பெண்கள் தொழில்முனைவோருக்கான ஊக்கமூட்டும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Viluppuram,Viluppuram,Tamil Nadu

First Published :

Jul 28, 2026 10:16 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

மாதவிடாய் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி… மூலிகை நாப்கினால் பெண்களின் கவனம் ஈர்க்கும் ரேணுகா

Read More

Previous Post

“மீண்டும் போராட்டம்” கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post

7 மாதங்களில் 12-வது முறையாக தாக்கிய புயல்… வெள்ளத்தில் மூழ்கிய சீனா! | China | World News (உலக செய்திகள்)

Next Post
7 மாதங்களில் 12-வது முறையாக தாக்கிய புயல்… வெள்ளத்தில் மூழ்கிய சீனா! | China | World News (உலக செய்திகள்)

7 மாதங்களில் 12-வது முறையாக தாக்கிய புயல்... வெள்ளத்தில் மூழ்கிய சீனா! | China | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin