போர்ட்டிக்சன்: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தொடங்கிய நிலையில், 22,000-க்கும் மேற்பட்ட இராணுவ மற்றும் காவல்துறைப் பணியாளர்கள், அவர்களது துணைவர்களுடன் சேர்ந்து வாக்களிக்கத் தொடங்கினர்.
பல இராணுவ முகாம்களைக் கொண்ட போர்ட் டிக்சன், முன்கூட்டிய வாக்களிப்பு தொடங்கியபோது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்டிருந்தது. பாகன் பினாங் மாநிலத் தொகுதியில் அதிகபட்சமாக 7,021 இராணுவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது துணைவர்களும், 25 காவல்துறைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது துணைவர்களும் வாக்களித்துள்ளனர்.
லிங்கி தொகுதியில் 2,222 இராணுவப் பணியாளர்கள் மற்றும் அவர்களது துணைவர்களும், 35 காவல்துறைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது துணைவர்களும் வாக்களித்துள்ளனர்.அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, போர்ட் டிக்சன் தொகுதி 9,706 முன்கூட்டிய வாக்காளர்களுடன் முன்னிலை வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து தம்பின் 4,701, ரெம்பாவ் 2,355, ராசா 2,145, செரம்பன் 1,635, ஜெலெபு 1,175, ஜெம்போல் 333 மற்றும் கோலா பிலா 289 வாக்காளர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ராணுவ அடிப்படைப் பயிற்சி மையத்தில் மேலே இடி முழக்கம் கேட்டபோதிலும், ராணுவ வீரர்களும் அவர்களது துணைவர்களும் தொடர்ச்சியாக வாக்களிக்க வந்தனர்.



