புதிய விதிமுறைகளின்படி, ஏசி (AC) வகுப்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கான டோக்கன்கள் காலை 8:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கான டோக்கன்கள் காலை 9:00 மணி முதல் 9:30 மணி வரையிலும் வழங்கப்படும். இக்காலகட்டத்தில் டோக்கன் பெறும் பயணிகள், தங்கள் டிக்கெட்டுகளை முறையாக முன்பதிவு செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். ‘Indianexpress.com’ இணையதளத்தில் வெளியான செய்தியின்படி, இம்முறை நடைமுறைக்கு வந்தால், டோக்கன் பெறுவதற்கு ஒரு முறையும், டிக்கெட் பெறுவதற்கு மற்றொரு முறையும் என முன்பிருந்தது போல கவுண்டருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. முன்பதிவு செயல்முறையை ஒரே கட்டத்தில் முடித்துவிட முடியும் என்பதால், இது பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கூட்ட நெரிசலையும் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


