Last Updated:
மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேக்கம் காரணமாக சுமார் 218 உட்புறச் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
குஜராத்தின் வல்சாத், நவ்சாரி, வாபி உள்ளிட்ட தென் பகுதிகளில் கனமழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
வல்சாத்தின் ஓரங்கா நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக ஆற்றங்கரையோரப் பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. பார்டி என்ற இடத்தில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளின் முதல் தளம் வரையிலும், சில இடங்களில் கூரையைத் தொடும் அளவிற்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இதேபோல், வாபி நகரில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் தரைதளம் மற்றும் திறந்தவெளிகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்கள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. நவ்சாரி மாவட்டத்தில் காவிரி, அம்பிகா, கரேரா, பூர்ணா ஆகிய அனைத்து முக்கிய நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக, சிக்கிலியிலிருந்து சபுதாரா செல்லும் மாநில நெடுஞ்சாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேக்கம் காரணமாக சுமார் 218 உட்புறச் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
Jul 24, 2026 11:49 AM IST


