Last Updated:
மருந்துகள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி அறிவிப்பு எதிரொலியாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டன.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 1,680 ரூபாய் அதிகரித்தது.
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, உலக பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை அதிக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதன்கிழமை அன்று கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து, 13,430 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு ஒரே நாளில் 1,680 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 245 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதேபோல், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ், 715 புள்ளிகள் சரிந்து 76 ஆயிரத்து 755 புள்ளிகளுடனும், நிஃப்டி 191 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 996 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக, மருந்துகள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி அறிவிப்பு எதிரொலியாக, பார்மா துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டன.


