IOCL, HPCL மற்றும் BPCL போன்ற முன்னணி எண்ணெய் நிறுவனங்கள், இறந்தவர்களின் பெயரில் உள்ள எரிவாயு இணைப்புகளை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்துமாறு அனைத்து முகவர்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. எரிவாயு விநியோகஸ்தர்கள் கள அளவில் இது தொடர்பாகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, எரிவாயு இணைப்பு யாருடைய பெயரில் உள்ளதோ, அவருடைய அலைபேசி எண்ணிற்கு வரும் OTP-யை கொண்டே சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால், உண்மையான நுகர்வோர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அந்த இணைப்பு முடக்கப்படுகிறது. அத்தகைய குடும்பங்களுக்கான சிலிண்டர் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.


