• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

முக்கிய வீரரை அணியிலிருந்து நீக்கும் தோனி.. உள்ளே வரும் இளம் தமிழக வீரர்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 2, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
முக்கிய வீரரை அணியிலிருந்து நீக்கும் தோனி.. உள்ளே வரும் இளம் தமிழக வீரர்! – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



சிஎஸ்கேவின் தோல்விக்கு முதலில் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய்தான் காரணம் என்ற கூறப்பட்டது. அதேபோல் அம்பதி ராயுடு, பிராவோ அணியில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது.

இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக நடக்கும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் மிக முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

முக்கியமான வீரர் ஒருவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடக்க உள்ளது. 

தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் சிஎஸ்கே அணி இன்றி வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் சென்னை வெற்றிபெற்றது. 

ஆனால் அதற்கு அடுத்தடுத்து ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மொத்தமாக தோல்வி அடைந்தது. தொடர் தோல்வி காரணமாக சிஎஸ்கே மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. 

சிஎஸ்கேவின் தோல்விக்கு முதலில் தொடக்க பேட்ஸ்மேன் முரளி விஜய்தான் காரணம் என்ற கூறப்பட்டது. அதேபோல் அம்பதி ராயுடு, பிராவோ அணியில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனால் கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் முக்கியமான மாற்றங்களை தோனி செய்தார். 

அதன்படி அணியில் இருந்து முரளி விஜய் நீக்கப்பட்டார். மாறாக டு பிளசிஸ், வாட்சன் ஓப்பனிங் இறங்கினார்கள். ருது ராஜ் நீக்கப்பட்டு ராயுடு உள்ளே வந்தார். இன்னொரு பக்கம் ஹசல்வுட் நீக்கப்பட்டு பிராவோ அணிக்குள் வந்தார். ஆனாலும் கடந்த போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. கடந்த போட்டியில் சிஎஸ்கேவின் தோல்விக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் சொல்லப்பட்டது. 

சிஎஸ்கேவில் தொடக்க வீரர் வாட்சன் சரியாக ஆடாதது காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இவரை அணியில் இருந்து தோனி நீக்கமாட்டார் என்கிறார்கள். எப்போதும் போல வாட்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அவர் கண்டிப்பாக பார்மிற்கு திரும்புவார் என்று சிஎஸ்கே நிர்வாகமும், தோனியும் நம்புவதாக கூறுகிறார்கள். இதனால் கண்டிப்பாக வாட்சன் இன்று விளையாடுவார். 

சென்னை அணியின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் கேதார் ஜாதவ். இவர் சிஎஸ்கே அணிக்குள் ஏன் இருக்கிறார் என்பதே சந்தேகமாக இருக்கிறது. கடந்த 20 போட்டிகளாக இவர் சரியாக ஆடவில்லை. பவுலிங்கும் செய்வது இல்லை. இவரின் பீல்டிங்கும் மிக மோசமாக இருக்கிறது. இதனால் இவரை அணியில் இருந்து மொத்தமாக தூக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. 

இதனால் இன்று சிஎஸ்கே அணியில் கேதார் ஜாதவ் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இவருக்கு நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் இவர் மாறவில்லை. அதனால் இவரை ஆடும் அணியில் இருந்து நீக்க சிஎஸ்கே முடிவு செய்துள்ளது என்கிறார்கள். இன்று நடக்கும் போட்டியில் கண்டிப்பாக கேதார் ஜாதவ் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்கிறார்கள். 

இவருக்கு மாற்றாக இரண்டு பேரை சிஎஸ்கே நிர்வாகம் மனதில் வைத்துள்ளது. ஒருவர் கர்ன் சர்மா. இன்னொருவர் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் நாராயண் ஜெகதீசன். இவர்கள் இருவரில் ஜெகதீசனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அணியில் ஒரு இளம் வீரர் இருக்க வேண்டும் என்பதால் தற்போது ஜெகதீசனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Read More

Previous Post

PrakashRaj vs Jaykumar: 69% இட ஒதுக்கீட்டுக்கு யார் காரணம்? நடிகர் பிரகாஷ் ராஜுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை!-former aiadmk minister d jayakumar condemns actor prakashrajs comment on 69 percent reservation in tamil nadu

Next Post

அரசு மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் அதிக FD வட்டி விகிதங்களை வழங்கும் NBFC-க்கள்!!!

Next Post
அரசு மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் அதிக FD வட்டி விகிதங்களை வழங்கும் NBFC-க்கள்!!!

அரசு மற்றும் தனியார் வங்கிகளைக் காட்டிலும் அதிக FD வட்டி விகிதங்களை வழங்கும் NBFC-க்கள்!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin