பிரபஞ்ச வரலாற்றில் 5,000 முதல் 10,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழக்கூடிய மிக அரிய வானியல் நிகழ்வு இன்னும் சரியாக 1,000 நாட்களில் நிகழவுள்ளது. எகிப்திய அழிவுக் கடவுளின் பெயரால் ‘அபோஃபிஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு மாபெரும் விண்கல், வரவிருக்கும் 2029 ஏப்ரல் 13 அன்று பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவுள்ளது. இது பூமியிலிருந்து வெறும் 20,000 மைல்கள் (32,000 கி.மீ) தொலைவில், அதாவது விண்வெளியில் நாம் நிலைநிறுத்தியுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விடவும் மிக நெருக்கமாகக் கடந்து செல்லவிருப்பது வானியலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

