• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அடுத்த வாரம் செர்டாங் மருத்துவமனையில் இதயப் பரிசோதனை ! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு அடுத்த வாரம் செர்டாங் மருத்துவமனையில் இதயப் பரிசோதனை ! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், அடுத்த வாரம் செர்டாங் மருத்துவமனையில் (Serdang Hospital) இதய அறுவை சிகிச்சை அல்லது பரிசோதனைக்கு (Heart Procedure) உட்படவுள்ளதாக இன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து நஜிப்பின் தற்காப்பு வழக்கறிஞர் ஃபர்ஹான் ஷாஃபி ‘ஃப்ரீ மலேசியா டுடே’ (FMT) ஊடகத்திடம் பேசுகையில், நஜிப் இந்தச் சிகிச்சைக்கு உட்படவிருப்பதை உறுதிப்படுத்தினார். எனினும், பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட காரணங்களால் சிகிச்சை நடைபெறும் நேரம் மற்றும் துல்லியமான இடத்தை தம்மால் வெளியிட முடியாது என்று கூறினார். “தற்போது நஜிப்பின் குடும்பத்தினர் தங்களின் தனிப்பட்ட உரிமையை (Privacy) மதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் அவ்வப்போது வழங்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

நஜிப்பின் சிறப்பு அதிகாரி அகமது லுட்ஃபி அசார் கூறுகையில், முன்னாள் பிரதமர் தற்போது சீரான உடல்நிலையுடன் (Stable condition) இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

72 வயதான நஜிப் ரசாக், எஸ்சி இண்டர்நேஷனல் (SRC International) ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, தற்போது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தற்போதைய சிறைத்தண்டனை காலம் வரும் 2028 ஆகஸ்ட் 23 அன்று நிறைவடைய உள்ளது.

இது தவிர, 1எம்டிபி (1MDB) ஊழல் ஊழல் தொடர்பான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி வழக்குகளில் அவருக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த 15 ஆண்டு சிறைத்தண்டனை, அவர் இப்போது அனுபவித்து வரும் தற்போதைய சிறைத்தண்டனை முடிந்த பின்னரே அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, சிறையில் இருந்தபோது கடந்த 2022 செப்டம்பர் மாதத்திலும் நஜிப்பின் இரத்த அழுத்தம் (Blood pressure) மாறுபட்டதன் காரணமாக அவர் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.



Read More

Previous Post

இந்திய ரூபாய் ஏன் மீண்டும் சரிந்தது? டாலருக்கு எதிரான மதிப்பு குறைya காரணங்கள்|Indian Rupee Falls Past ₹96: How the Iran War Is Driving It

Next Post

பிரதியமைச்சர், எம்.பியை கைது செய்ய உத்தரவு

Next Post
பிரதியமைச்சர், எம்.பியை கைது செய்ய உத்தரவு

பிரதியமைச்சர், எம்.பியை கைது செய்ய உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin