அனைவரது கைகளிலுமே தற்போது ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் சேவை உள்ளது. யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என பெரும்பாலான நேரத்தை மக்கள் சோஷியல் மீடியாவில் செலவு செய்கின்றனர்.
இதன் காரணமாக டேட்டா என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அதன் யூசர்களுக்கு பல்வேறு ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் கஸ்டமர்களை ஈர்ப்பதற்காக புதிய ப்ரீபெய்டு பிளான் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. அது என்ன திட்டம், அதன் விலை என்ன என்பதை இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL அதன் போட்டியாளர்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi (Vodafone Idea) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான பயனர் தளத்தை கொண்டிருப்பதால் கஸ்டமர்களை ஈர்ப்பதற்காக தொடர்ந்து பல்வேறு விதமான ஆஃபர்களை வழங்கி வருகிறது. நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி தேவைப்படும் யூஸர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது BSNL 425 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பிளானின் விவரங்கள் :
BSNL-ன் இந்த புதிய நீண்ட நாள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 2,398 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 425 நாட்கள் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த பிளானை வாங்கும் யூசர்கள் அன்லிமிடெட் இலவச போன் கால்களை வேலிடிட்டி காலம் முழுவதும் அனுபவிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இந்த வேலிடிட்டி காலம் முழுவதும் ஒரு நாளைக்கு 2GB என்ற கணக்கில் மொத்தமாக 850GB டேட்டாவை சப்ஸ்கிரைபர்கள் பயன்படுத்தலாம். மேலும் இதில் ஒரு நாளைக்கு 100 இலவச SMS அனுப்பும் வசதியும் உள்ளது.
வழக்கமான அடிப்படையில் இன்டர்நெட் பயன்படுத்தும் யூசர்களுக்காக இந்த புதிய ப்ரீபெய்டு திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தி உள்ளது. போதுமான அளவு டேட்டா வழங்கப்பட்டுள்ளதால் சப்ஸ்கிரைப்ர்கள் டேட்டா காலி ஆகிவிடுமோ என்ற பதட்டம் இல்லாமல் தொடர்ந்து இன்டர்நெட் சேவையை பயன்படுத்தலாம். BSNL வழங்கும் இந்த திட்டமானது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய 425- நாட்கள் வேலிடிட்டி ப்ரீபெய்டு திட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள யூசர்களுக்கு குறிப்பாக கிடைக்கிறது.
நீட்டிக்கப்பட்ட சேவையை வழங்கும் BSNL-ன் இந்த நீண்ட நாள் வேலிடிட்டி ப்ரீபெய்ட் பிளான் அடிக்கடி ரீசார்ஜ் செய்வதன் அவசியத்தை நீக்குகிறது. ஏற்கனவே இருக்கும் ரீசார்ஜ் பிளான்களுடன் அதிக வேலிடிட்டியை வழங்கி BSNL அதன் யூசர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த புதிய ப்ரீபெய்டு திட்டமானது குறிப்பாக அடிக்கடி ரீசார்ஜ் செய்வதன் தேவையை குறைப்பதற்காக நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியை வழங்க அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
