• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்.. சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்.. | IIT Madras Mother‑Son Duo Graduate Together: Inspiring Story of Education at 45 and 21

GenevaTimes by GenevaTimes
July 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்.. சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்.. | IIT Madras Mother‑Son Duo Graduate Together: Inspiring Story of Education at 45 and 21
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்.. சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்..

புது விஷயங்களை கற்று கொள்ள வயது ஒரு தடையில்லை என கூறுவார்கள். அப்படி இங்கே ஒரு தாய் தனது 21 வயது மகனுடன் படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை ஐஐடி மெட்ராஸில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அரிதான நிகழ்வாக தாயும், மகனும் ஒரே மேடையில் பட்டம் பெற்றுள்ளனர். 45 வயதான ஜிகிஷா டெய்லர் மற்றும் அவரது 21 வயது மகன் ஆதித்யா கபாடியா ஆகிய இருவரும், ஐஐடி மெட்ராஸில் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் ஆன்லைன் படிப்பை முடித்து, பட்டம் பெற்றனர்.

ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்.. சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்..

குஜராத்தின் பருச் பகுதியை சேர்ந்தவர் ஜிகிஷா டெய்லர். இவர் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குடும்ப சூழல் காரணமாக 2019-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். ஆனால், கல்வியின் மீதான அவரது ஆர்வம் குறையவில்லை. இந்நிலையில் தான் அவரது மகன் ஆதித்யா 2021ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் ஐஐடி மெட்ராஸின் ஆன்லைன் பி.எஸ். (BS) டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் கல்லூரிகள் ஆன்லைன் முறைக்கு மாறியிருந்ததால், ஆதித்யா வீட்டில் அமர்ந்து படிப்பதை கவனித்த ஜிகிஷா, தானும் டேட்டா சயின்ஸ் கற்று கொள்ளலாமே என ஆசை கொண்டாராம். மகன் ஆதித்யாவும் ஊக்கம் தந்ததால் 2022ஆம் ஆண்டின் இறுதியில் ஜிகிஷாவும் அதே பாடத்தில் சேர்ந்தார்.

தனது அன்றாட வீட்டு வேலைகளுக்கு இடையே ஜிகிஷா படிப்புக்கு என நேரம் ஒதுக்கி படித்தாராம். தினமும் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து காலை 7 மணி வரை படிப்பதையும், பின்னர் மதியம் வீட்டு வேலைகளை முடித்த பிறகு பாடங்களை படிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தாராம்.

தாயும், மகனும் ஒரே பாடத்தை படித்ததால், ஒருவருக்கொருவர் போட்டி போட்டு படித்துள்ளனர். தேர்வுகளில் யார் சிறந்த கிரேடு எடுப்பது என பெரிய போட்டியே நிகழுமாம். மகன் ஆதித்யா தேர்வுகளுக்கு எப்படி தயாராவது, நேர்காணலை எவ்வாறு எதிர்கொள்வது என தனது தாய்க்கு வழிகாட்டியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் பட்டமளிப்பு விழாவுக்கு சென்னை வந்துள்ளனர். அப்போது சக மாணவர்களுக்கு இவர்களின் விவரங்கள் தெரிய வந்ததால் ஐஐடி நிர்வாகத்திடம் பேசி இருவரும் மேடையில் ஒரே நேரத்தில் பட்டம் பெற ஏற்பாடு செய்தார்களாம்.

ஆதித்யா ஒரு நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் இன்டர்னாக சேர்ந்து, தற்போது முழுநேர பணியில் உள்ளார். ஜிகிஷாவும் கல்லூரிகளில் பேராசிரியர் வேலைக்காக செல்ல இருக்கிறாராம். உறவினர்கள், நண்பர்கள் இந்த வயதில் எதற்கு படிப்பு என கேட்டபோது, நான் வழக்கமான ஒரு தாயாக இருக்க விரும்பவில்லை என கூறுவாராம் ஜிகிஷா. அதனை நிரூபித்தும் காட்டியுள்ளார்.

Share This Article

English summary

IIT Madras Mother‑Son Duo Graduate Together: Inspiring Story of Education at 45 and 21

ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்.. சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நடந்த சுவாரஸ்யம்..-A 45‑year‑old mother and her 21‑year‑old son graduated together from IIT Madras — a powerful story of lifelong learning, family ambition, and women’s education that’s inspiring students across India.

Story first published: Tuesday, July 14, 2026, 12:57 [IST]

Other articles published on Jul 14, 2026

Read More

Previous Post

பாகிஸ்தான் உடைந்தது? சுதந்திரம் பெற்றதாக பலுசிஸ்தான் அறிவிப்பு! மொத்த வளமும் போச்சு | Balochistan ‘Declares Independence’ From Pakistan; 85% Territory Claim Unverified

Next Post

2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: தமிழக அரசு முடிவு | Makkal Osai

Next Post
2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: தமிழக அரசு முடிவு | Makkal Osai

2031க்குள் 20,000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: தமிழக அரசு முடிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin