ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே நிபந்தனைகள், ஈரானின் உரிமைகளை மதிப்பதும், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கடைப்பிடிப்பதும்தான் என்று ஈரானிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும், அழுத்தம் அல்லது இராணுவ அச்சுறுத்தல்கள் மூலம் திணிக்கப்படும் எந்தவொரு ஏற்பாடுகளையும் தெஹ்ரான் ஏற்காது என்றும் அவர் எச்சரித்தார்.
ஹோர்முஸ் நீரிணையில் மாற்று வழி
தெஹ்ரானில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா, ஈரானிய ஆயுதப் படைகள் நாட்டின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், இந்த மூலோபாய நீர்வழியில் ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இருந்து பின்வாங்காது என்றும் கூறினார்.

ஈரான்-அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஏற்பாடுகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
அழுத்தத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது
மேலும், ஈரான் முன்மொழிந்த ஏற்பாடுகளை முன்னர் ஏற்றுக்கொண்ட போதிலும், வோஷிங்டன் பின்னர் ஹோர்முஸ் நீரிணையில் ஒரு மாற்று வழியை நிறுவ முயன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒப்புக்கொள்ளப்பட்ட கட்டமைப்பிற்கு வெளியே ஹோர்முஸ் நீரிணையில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஈரானிடமிருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்த இராணுவ செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அல்லது அழுத்தத்தின் மூலம் அந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படாது என்றும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

