Last Updated:
இந்த அசாதாரண உயிரிழப்புகள், உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தால் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐரோப்பாவில் ஏற்பட்ட தீவிர வெப்ப அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் இருந்து ஐரோப்பிய கண்டத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் வெயில் உச்சத்தில் இருந்த ஜூன் 22 முதல் 28ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கடுமையான வெப்ப அலை வீசியது.
இதனால் பல பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், மின்சாரம் தடைப்பட்டது மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்களும் சேதம் அடைந்தன. இந்த நிலையில், வெப்ப அலை உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஐரோப்பா முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக, ஜெர்மனியில் மட்டும் 5 ஆயிரத்து 120 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். அதேபோல, பிரிட்டனில் 2 ஆயிரத்து 700 பேரும், பிரான்ஸில் 2 ஆயிரம் பேரும், பெல்ஜியத்தில் ஆயிரத்து 700 பேரும், ஸ்பெயினில் ஆயிரம் பேரும் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 65 வயதை கடந்தவர்கள் என்றும், கொரோனாவின் தாக்கமும் இதற்கு முக்கிய காரணியாக இருக்கக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அசாதாரண உயிரிழப்புகள், உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தால் நிகழ்ந்துள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தீவிர வெப்ப அலை.. கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்.. ஐரோப்பாவில் 10 ஆயிரத்தை கடந்தது உயிரிழப்பு எண்ணிக்கை.!


