International
oi-Yogeshwaran Moorthi
தெஹ்ரான்: ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துளது. ஹர்முஸ் நீரிணையில் எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது என்ற ஈரானின் திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேற்காசியால் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்திக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி உள்ளிட்ட தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையில் அமைதி ஒப்பந்தம் கொண்டு வர முயற்சிகள் நடந்தன. பின்னர் அமைதி உடன்படிக்கை நடந்த போதும் கூட, மீண்டும் இரு நாடுகளுக்கு இடையிலும் தாக்குதல் தொடங்கி இருக்கிறது.

ஹார்முஸ் நீரிணை வழியாக பயணித்த சைப்ரஸ் நாட்டு கப்பலை இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்கியது. இதனால் அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இதனால் மீண்டும் ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இது பல்வேறு நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக ஈரான் தரப்பில், மேற்காசியாவில் அமெரிக்காவின் தலையீடு முடிவுக்கு வரும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்படும். இந்த ஹார்முஸ் நீரிணையில் எந்தவொரு வெளிநாட்டு கப்பலுக்கும் அனுமதி கிடையாது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய முன்பு இருந்த சூழல் திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே அமெரிக்கா படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளன. ஈரானின் பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் கடலோர பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் ஈரானின் ராணுவ பலத்தை முடிவுக்கு கொண்டு வரும் வரை தாக்குதல் தொடரும் என்று அறிவித்திருக்கிறது.


