• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அங்க சுத்தி இங்க சுத்தி பேங்க் வேலைக்கும் ஆப்பு.. 9 ஆண்டுகளில் முதல்முறையாக ஊழியர்களை குறைத்த HDFC!! | HDFC Bank Cut Jobs Using AI: What Indian Bank Employees and Investors Must Know

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அங்க சுத்தி இங்க சுத்தி பேங்க் வேலைக்கும் ஆப்பு.. 9 ஆண்டுகளில் முதல்முறையாக ஊழியர்களை குறைத்த HDFC!! | HDFC Bank Cut Jobs Using AI: What Indian Bank Employees and Investors Must Know
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அங்க சுத்தி இங்க சுத்தி பேங்க் வேலைக்கும் ஆப்பு.. 9 ஆண்டுகளில் முதல்முறையாக ஊழியர்களை குறைத்த HDFC!!

ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையால் ஐடி, கால் சென்டர், ஹெச்.ஆர் போன்ற துறைகளில் தான் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு பறி போகிறது என பார்த்தால் தற்போது வங்கி வேலைகளும் பறி போக தொடங்கியுள்ளன. அதுவும் இந்தியாவில் ஏஐ-ஆல் தனியார் வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி, தனது அன்றாட வேலைகளை தானியங்கி முறைக்கு (Automation) மாற்ற அதிகளவில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அங்க சுத்தி இங்க சுத்தி பேங்க் வேலைக்கும் ஆப்பு.. 9 ஆண்டுகளில் முதல்முறையாக ஊழியர்களை குறைத்த HDFC!!

கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டின் படி, ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 2,11,178 ஆக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டு 2,14,521 என இருந்தது. அதாவது கடந்த ஆண்டை விட 3,343 ஊழியர்கள் குறைக்கப்பட்டுள்ளனர். ஹெச்டிஎப்சி வங்கியில் 9 ஆண்டுகளில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவது இதுவே முதல்முறை.

ஹெச்டிஎப்சி வங்கி தினமும் ஒரே மாதிரி செய்ய கூடிய வேலைகளை ‘Neev’ என்ற ஏஐ கருவி மூலம் மேற்கொள்கிறது. அதே போல பணத்தை தானாகவே கணக்கிட்டு வழங்கும் இயந்திரங்களை (Cash Recycler Machines) பயன்படுத்துவதையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, வங்கியில் மேற்பார்வையாளர் அல்லாத பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள், அதாவது எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் போன்ற Non-supervisory roleகளில் இருந்தவர்கள் தான் அதிக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கை 8,000-க்கும் மேல் குறைந்து 1,62,797 ஆக சரிந்துள்ளது. மேலும், புதிய பணியாளர்களை சேர்ப்பதும் சுமார் 3,811 ஆக குறைந்துள்ளது.

அதே வேளையில் மிடில் லெவல் மற்றும் ஜூனியர் நிலை பணியாளர்களின் எண்ணிக்கை முறையே 1,252 மற்றும் 3,543 ஆக உயர்ந்துள்ளது. மூத்த நிர்வாகத்தில் கூடுதலாக 15 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வங்கிகளில் எந்த பணிகளுக்கு தேவை அதிகரித்துள்ளது குறைந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

இது குறித்து வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சசிதர் ஜெகதீசன் அளித்த பேட்டியில் தொழில்நுட்பத்தை முன்னிறுத்திய, வாடிக்கையாளர் மைய வங்கி சேவையை நோக்கி முன்னேறி வருகிறோம். இந்த மாற்றத்திற்கு ஏற்ப ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். அலுவலக பணிகளில் இருக்கும் திறமையானவர்களை, நேரடியாக வாடிக்கையாளர்களை கையாளும் பணிகளுக்கு நாங்கள் மாற்றி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆக்சிஸ் வங்கியும் கூட கடந்த நிதியாண்டில் 3100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. வங்கிகள் சேவைகளை மேம்படுத்தவும் அதிக வருவாய் ஈட்டவும் தற்போது தொழில்நுட்ப மேம்பாட்டில் தான் அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால் சில வேலைகள் மனிதர்களிடம் இருந்து ஏஐ வசம் செல்ல தொடங்கியுள்ளன.

Share This Article

English summary

HDFC Bank Cut Jobs Using AI: What Indian Bank Employees and Investors Must Know

அங்க சுத்தி இங்க சுத்தி பேங்க் வேலைக்கும் ஆப்பு.. AI வருகையால் ஊழியர்களை பணிநீக்கம் செய்த HDFC..!!- HDFC Bank says it will use AI and automation to streamline operations, leading to workforce restructuring and targeted role cuts. The move aims to reduce costs, improve efficiency, and re-skill staff, while raising concerns about job losses in India’s private banking sector.

Story first published: Monday, July 13, 2026, 12:03 [IST]

Other articles published on Jul 13, 2026

Read More

Previous Post

திடீரென மாறிமாறி தாக்கும் ஈரான் – அமெரிக்கா.. இப்போது என்ன பிரச்சனை? சிக்கிய 11 இந்தியர்கள் | Iran VS US: What exactly is the problem between both countries today? Why do the two nations keep attacking each other?

Next Post

ட்ரம்பின் வலதுகரம்; ஈரான் மீதான போரின் முக்கியஸ்தர்! – திடீர் மரணமடைந்த லிண்ட்சே கிரஹாம் யார்?

Next Post
ட்ரம்பின் வலதுகரம்; ஈரான் மீதான போரின் முக்கியஸ்தர்! – திடீர் மரணமடைந்த லிண்ட்சே கிரஹாம் யார்?

ட்ரம்பின் வலதுகரம்; ஈரான் மீதான போரின் முக்கியஸ்தர்! - திடீர் மரணமடைந்த லிண்ட்சே கிரஹாம் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin