இத்திட்டத்தின் கீழ், ஒரு தனிநபர் தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதேவேளையில், கணவன்-மனைவி இணைந்து தொடங்கும் கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இருப்பினும், கூட்டுக் கணக்கைப் பொறுத்தவரை, முதலீட்டில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் சமமான பங்கு இருப்பது கட்டாயமாகும்.


