உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை பதவியிலிருந்து மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக புதிய ஒருவரை நியமிக்க உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்
ஸெலென்ஸ்கி முடிவு செய்துள்ளார்.
நாட்டின் புதுப்பிக்கப்பட்ட அரசியல் உத்தியை செயல்படுத்துவதற்காக இந்த
அமைச்சரவை மாற்றம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை அவர் இட்டுள்ளார்.
தெளிவான நிலை
குறித்த பதிவில் மேலும் தெரிவித்த அவர், குழுவில் பிரதமராக யூலியா ஆற்றிய தெளிவான நிலையான மற்றும் பயனுள்ள பணிகளுக்கு
எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உக்ரைனின் மிக முக்கிய கூட்டாளி நாடான அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்தும் ஒரு
புதிய மற்றும் முக்கியமான பொறுப்பை அவருக்கு வழங்க முன்வந்துள்ளேன்” என
குறிப்பிட்டுள்ளார்.
2025 ஜூலை மாதம் பிரதமராகப் பொறுப்பேற்ற ஸ்விரிடென்கோ, அமெரிக்காவுக்கான
உக்ரைன் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர் யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் தெரிவித்துள்ளார்.
பெரிய அளவு
உக்ரைன் சட்டப்படி பிரதமர் பதவி விலகினால் ஒட்டுமொத்த அமைச்சரவையும்
கலைக்கப்பட வேண்டும் என்பதால் உக்ரைன் அரசில் பெரிய அளவிலான மாற்றங்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய பிரதமருக்கான பந்தயத்தில் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ
ஃபெடோரோவ், எரிசக்தி அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால் மற்றும் நாஃப்டோகாஸ் (Naftogaz) எரிசக்தி நிறுவனத்தின் தலைவர் செர்ஹி கொரெட்ஸ்கி ஆகியோரின்
பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருடன் சேர்த்து உக்ரைனின் சட்ட அமுலாக்க முகமைகளின் தலைவர்களும்
மாற்றப்பட உள்ளதாக ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

