தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த கோடை காலத்தில் உஷ்ணத்தில் இருந்து காத்துக் கொள்வதற்கு அதிக அளவில் குளிர்பானங்கள், பழங்கள் என பொதுமக்கள் தேடி வாங்கிச் செல்கின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் நேருஜி சாலைகளில் உள்ள பல சந்தைகளில் பழங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் விலையும் கூடியிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அடிக்கும் வெயிலால்,மே மாதத்தில், பழங்களின் விலை அதிகரித்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பொதுமக்களும் விலை அதிகரித்து இருந்தாலும், பழங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
விழுப்புரத்தில், ஒரு கிலோ ஆப்பிள் 200, 240 ரூபாய்க்கும், மாதுளை ரூ. 200, 220 க்கும், சாத்துக்குடி 100 ரூபாய்க்கும், ஆரஞ்சு 140,160 ரூபாய்க்கும், மாம்பழம் 80 ரூபாய், தர்பூசணி 40 ரூபாய்க்கும், கிர்னி பழம் 40 ரூபாய்க்கும், அண்ணாச்சி பழம் கிலோ 100 ரூபாய்க்கும், திராட்சை கிலோ 120 ரூபாய்க்கும், செவ்வாழை 100 ரூபாய்க்கும், சப்போட்டா 80 ரூபாய்க்கும்,டிராகன் ஃபுரூட் 100 ரூபாய்க்கும் விற்பனை ஆவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் அனைத்து பழங்களிலும் 20 ரூபாய் கூடி இரு மடங்காக விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக, பொதுமக்கள் திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி, மாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை விரும்பி வாங்கிச் செல்கின்றனர் எனவும் வியாபாரம் சிறந்த முறையில் நடக்கிறது எனவும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
