கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி வலிகளைத் தாண்டி, புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 60% பேர் மனச்சோர்வு, பதற்றம், தீவிர மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் மருத்துவ வதந்திகள் நிலைமையை மேலும் சிக்கலாக்குகின்றன. புதிதாகப் புற்றுநோய் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 93% பேர் தவறான மருத்துவத் தகவல்களால் (Misinformation) திசைதிருப்பப்பட்டு, முறையான சிகிச்சைகளைத் தாமதப்படுத்துவதாகவும் அல்லது முற்றிலும் தவறவிடுவதாகவும் இந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது.

