ஃபெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஃபெடரேசன் கோப்பை தடகளப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. ஆடவர் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் வாய்ப்பில் சோப்ரா 82 மீட்டர் மட்டுமே ஈட்டி எறிந்த நிலையில் டி.பி.மனு முன்னிலை பெற்றார். எனினும் நான்காவது வாய்ப்பில் 82 புள்ளி 27 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்.
இதையும் படிங்க:
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைப்பு!
டி.பி. மனு இரண்டாவது இடமும், உத்தம் பாட்டில் மூன்றாவது இடமும் பிடித்தனர். தங்கப்பதக்கம் வென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீரஜ் சோப்ரா, இந்த முறை ஒலிம்பிக் போட்டி மிகவும் சவால் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறினார். இன்னும் குறுகிய காலமே உள்ளதால், சிறப்பாக செயல்பட்டு போட்டிக்கு தயாராவேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)