Last Updated:
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வெற்றிகரமாக இந்த மைல்கல்லை எட்டிய உலக அளவிலான இரண்டாவது நாடு என்ற பெருமையைச் பெற்றுள்ளது சீனா.
விண்ணில் செலுத்திய ராக்கெட் பூஸ்டரை மறுபயன்பாட்டிற்கு மீட்டு சீனா சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தை தொடர்ந்து, ராக்கெட் பூஸ்டரை மறுபயன்பாட்டிற்கு கொண்டுவர சீனா முயன்று வந்தது. அந்த வகையில், தனது அண்டை நாடான தைவானில் உள்ள சென்சாங் வணிக விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ’லாங் மார்ச் 10பி’ (Long March-10B) என்ற ராக்கெட்டை சீனா ஏவியது.
A historic day in China’s space program!
China’s Long March-10B has successfully completed its maiden flight—and recovered its first stage via a sea-based net. This marks the country’s first-ever controlled rocket recovery. A major leap toward reusable launch capabilities.… pic.twitter.com/FWuQXLltaD— Mao Ning 毛宁 (@SpoxCHN_MaoNing) July 10, 2026
இதைத் தொடர்ந்து, அதனை வெற்றிகரமாகக் கடலில் தரையிறக்கி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது சீனா. இதன் மூலம், விண்வெளிப் பயணங்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய (Orbital-class Reusable Rocket) ராக்கெட் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக வெற்றிகரமாக இந்த மைல்கல்லை எட்டிய உலக அளவிலான இரண்டாவது நாடு என்ற பெருமையைச் சீனா பெற்றுள்ளது. ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான 70 சதவீத ஆற்றலை வழங்கும் இந்த பூஸ்டர்கள், ராக்கெட் குறிப்பிட்ட தூரம் சென்றதும் தனியாக பிரிந்து வந்து கடலில் விழுந்து வீணாகும். தற்போது, பூஸ்டரை பாதுகாப்பாக மீட்டுள்ள சீனா, அதனை பழுதுபார்த்து மீண்டும் அடுத்தாண்டு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.


