Last Updated:
சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு அடுத்தடுத்து சோதனைகளை சந்தித்து வரும் திரிணாமுல் காங்கிரஸுக்கு இது மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான 440 கோடி ரூபாய் பணம் இருக்கும் 3 வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
விஐபிகளுக்கான தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர் சேவைகளை வழங்கும் கொல்கத்தாவைச் சேர்ந்த கேர்வெல் (Carewell) நிறுவனத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் கேர்வெல் நிறுவனத்திற்கும் இடையே சந்தேகத்திற்கிடமான பணப்பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2006 வரையிலான காலகட்டத்தில், கேர்வெல் மற்றும் அதற்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து 160 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்திருப்பதாகவும்,
இந்த நிதியைக் கொண்டு 82 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு விமானம் மற்றும் ஹெலிகாப்டரை கேர்வெல் நிறுவனம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
கட்சியின் நிதியைக் கொண்டு விமானமும் ஹெலிகாப்டரும் வாங்கப்பட்டிருந்தாலும், அவை கட்சிக்காக வாடகைக்கு விடப்பட்டதாகவும், விமானப் பயன்பாடு என்ற வகையில் கேர்வெல் நிறுவனத்திற்கு கணிசமான தொகை பரிமாறப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதனால், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 440 கோடி ரூபாய் பணம் இருக்கும், 3 வங்கிக் கணக்குகளை முடக்குவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Jul 09, 2026 10:09 AM IST


