இன்றைய காலகட்டத்தில், உங்கள் குழந்தையின் உயர்கல்விக்காக இப்போதே முதலீடு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். கல்விச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தை பிறந்த உடனேயே சரியான முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமான செயலாகும். நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) அல்லது SIP-கள் தவிர, பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த அரசுத் திட்டமும் உள்ளது. இதில் உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, அதிக வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால், உங்கள் குழந்தையின் எதிர்காலச் செலவுகள் குறித்து நீங்கள் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கலாம். அதிக வருமானம் மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் வரி விலக்குச் சலுகைகளும் உள்ளன. பெண் குழந்தைகளுக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ (Sukanya Samriddhi Yojana) என்ற இந்தச் சிறப்புத் திட்டம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இப்போது கேள்வி என்னவென்றால், நிலையான வைப்புத்தொகை அல்லது செல்வமகள் சேமிப்பு திட்டம். இவ்விரண்டில் எதில் முதலீடு செய்தால் உங்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும்? என்று தற்போது பார்ப்போம்.


