Last Updated:
இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு இன்று (ஜூலை 9) காலை 8:00 மணிக்கு தொடங்கியது
கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து மங்களூரு, கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 25 வரை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து கேரளாவுக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன் ஒருபகுதியாக மங்களூரு சென்ட்ரல் – சென்னை எழும்பூர் இடையே ஜூலை 13, 20, 27, ஆகஸ்ட் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கத்தில் ஜூலை 14, 21, 28, ஆகஸ்ட் 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் காலை 8:40 மணிக்கு மங்களூரு சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே இருமார்க்கத்திலும் தலா 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
Chennai,Tamil Nadu
Jul 09, 2026 10:16 AM IST


