Last Updated:
கேரளாவின் பினராயியில் மலைப்பாம்பின் உடலில் சிக்கிய வளையல் பத்திரமாக அகற்றப்பட்டது. வனத்துறையினர் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
கேரளாவின் பினராயி பகுதியில் ஒரு மலைப்பாம்பின் உடலில் வளையல் மாட்டிக்கொண்டதை அடுத்து, அது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்கு அருகில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. அப்போது, எதிர்பாராதவிதமாக அதன் உடலின் நடுப்பகுதியில் ஒரு உலோக வளையல் பலமாக மாட்டிக்கொண்டது.
இந்நிலையில், அந்த மலைப்பாம்பு நகர்ந்து செல்ல முயன்றபோது, அந்த வளையல் அதன் உடலை இறுக்கியதால், அதனால் சரியாக நகர முடியாமல் அவதிப்பட்டது. மேலும், அந்த வளையல் பாம்பின் உடலில் ஆழமான காயத்தை ஏற்படுத்தும் அபாயமும் இருந்தது. இதையடுத்து பாம்பு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கும் பாம்பு பிடி வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
மேலும் பொதுவாக மலைப்பாம்புகள் வேகமாக நெளியும் தன்மை கொண்டவை. மேலும், உடலில் காயம் அல்லது அசௌகரியம் இருக்கும்போது அவை மிகவும் ஆக்ரோஷமாக தாக்கக் கூடும் என்பதால் விரைவான நடவடிக்கை எடுத்த மீட்புக்குழுவிற்க அங்கிருந்த மங்கள் தங்களது நன்றிகளை தெரிவித்தனர். இந்த சாகச மீட்புப் பணி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


