உத்தர பிரதேசத்தில் மிர்ஸாப்பூர் மற்றும் சோன்பத்ராவைச் சேர்ந்த 15 தேர்தல் பணியாளர்கள் அதிக காய்ச்சல், அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
பிகாரின் போஜ்புரில் 5 பேரும்,ரோதாஸ், கைமுர், ஔரங்காபாத் ஆகிய இடங்களில் தலா ஒருவர் என 8 வாக்குச் சாவடி பணியாளர்கள் பலியாகினர்.
ஒடிஸாவின் ரூர்கேலா, ஜார்ஸுகூடா, சம்பல்பூர், பாலங்கீர் மாவட்டங்களில் பலர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில், 1,300 பேர் வெப்பம் தொடர்பான பிரச்னைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இன்றும் (ஜூன் 1) வட மாநிலங்களில் வெப்ப அலை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

&w=1200&resize=1200,675&ssl=1)