களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மகா விஹார வம்ச ஷியாமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி மகா விகாரைப் பிரிவின் அநுநாயக்க, சாஸ்திரபதி அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (a)


