ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் இளம் வாக்காளர்களும், வெளிமாநிலங்களில் வாழும் ஜொகூர் மக்களுமே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பார்கள் என்று ஜொகூர் பிகேஆர் தலைவர் டாக்டர் ஜாலிகா முஸ்தபா தெரிவித்துள்ளார். பாரிசான் நேசனல் கூட்டணி இந்த மாநிலத்தில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கூறியுள்ளதை அவர் நிராகரித்தார். தேர்தல் முடிவுகள் வாக்காளர்களால் தீர்மானிக்கப்படுபவையே தவிர, கணிப்புகளால் அல்ல என்று ஜாலிகா கூறினார். […]
Read More
