கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் 40 ரோஹிங்யா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கூட்டாக வெளியிட்ட மன்னிப்பு அறிக்கையானது அவர்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் நேர்மறையான நடவடிக்கை என மலேசிய மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண அமைப்பான ‘மகர்’ (Mahar) வரவேற்றுள்ளது.
அகதிகளுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதோடு நின்றுவிடாமல், மலேசியாவில் வசிக்கும் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய கடமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும், நாட்டின் சட்டங்கள், கலாச்சாரம் மற்றும் சமூக விழுமியங்களை மதித்து நடப்பதற்கு இந்த அமைப்புகள் வழிகாட்ட வேண்டும் என்றும் மகர் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய அதன் தலைவர் ஜிஸ்மி ஜொஹாரி, ஒரு சிலரின் தவறான நடத்தைக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் பொதுமைப்படுத்துவது நீதியாகாது என்றாலும், உள்ளூர் மக்களின் பாதுகாப்பு சார்ந்த அச்சங்களை அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரோஹிங்யா நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண மியன்மாரில் நடக்கும் ஒடுக்குமுறைகளை நிறுத்த அனைத்து உலக அளவில் இந்த அமைப்புகள் தங்களின் குரலை வலுப்படுத்த வேண்டும் என்றும், அனைத்துத் தரப்பினரிடையே பரஸ்பர மரியாதையும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையும் அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



