அமெரிக்க அதிகாரிகளால் கடலில் வைத்துச் சிறைபிடிக்கப்பட்ட லெனோர்/டவினா (Lenore/Davina) கப்பலைச் சேர்ந்த 22 ஈரான் மாலுமிகள் பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான கடல்சார் வர்த்தகத் தடையின் போது இந்த மாலுமிகள் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.
இறுதி ஏற்பாடுகள்
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த இஷாக் தார், விடுவிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்குப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் திரும்புவதை உறுதி செய்யப் பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இறுதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானின் இடைஸ்திர முயற்சி (மத்தியஸ்தம்) மூலம் தாயகம் திரும்பும் ஈரானிய மாலுமிகளின் நான்காவது குழு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

