புதிய விதிகளின் கீழ் சில முக்கிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் முறையின் கீழ், சேமிப்புக் கணக்குகள், தொடர் வைப்பு நிதி (RD) மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகளில் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். மேலும், பணம் எடுப்பதற்கான படிவம் (withdrawal slip) இல்லாமலேயே சேமிப்புக் கணக்குகளிலிருந்து அதிகபட்சமாக ரூ. 20,000 வரை பணம் எடுக்கலாம். இருப்பினும், இவசதிகள் தற்போது தனிநபர் கணக்குகளுக்கு (single-holder accounts) மட்டுமே பொருந்தும். கூட்டுக் கணக்குகள் மற்றும் சிறார் கணக்குகள் ஆகியவை இந்த ‘இ-கேஒய்சி’ (e-KYC) வரம்பிற்குள் வராது. மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு உள்ள கிளை அஞ்சலகத்தில் மட்டுமல்லாமல், நாட்டின் எந்தவொரு கிளை அஞ்சலகத்திலும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இந்த வசதியை ‘BO Inter-Operability’ (கிளை அஞ்சலகங்களுக்கு இடையிலான செயல்பாட்டு வசதி) என்ற பெயரில் இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது கிராமப்புற மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்.

