Last Updated:
திருத்தப்பட்ட அறிக்கை சிபிஎஸ்இ தரப்பில் விரைவில் வெளியிடப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், நடப்பு கல்வி ஆண்டில் 7, எட்டு மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது என்றார்.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் 7, 8 மற்றும் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இரு மொழிக் கொள்கையின் அடிப்படையிலேயே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வரை தங்கள் கல்வியைத் தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில் எந்த வகுப்பில் இருந்து மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடாததே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பமடையக் காரணம் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
Jun 26, 2026 12:51 PM IST


