• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இஸ்ரேல் நிறுவனம் சதி: ஓபன் ஏஐ குற்றச்சாட்டு | OpenAI claims Israeli firm tried to disrupt Lok Sabha polls

GenevaTimes by GenevaTimes
May 31, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தேர்தலில் பாஜகவுக்கு எதிராக இஸ்ரேல் நிறுவனம் சதி: ஓபன் ஏஐ குற்றச்சாட்டு | OpenAI claims Israeli firm tried to disrupt Lok Sabha polls
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இஸ்ரேல் நாட்டிலிருந்து இயங்கும் நிறுவனம் ஒன்று இந்திய மக்களவை தேர்தலை சீர்குலைக்க முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய பொதுத் தேர்தல்களை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த வகையில், வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தற்போது இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டாய்க் (STOIC) என்ற அரசியல் பிரச்சார மேலாண்மை நிறுவனம் ஒன்று இந்திய பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பாஜகவுக்கு எதிராகவும், எதிர்கட்சியான காங்கிரஸை பாராட்டியும் கருத்துகளை சமூக வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் பரப்ப முயன்றதாக ஓபன் ஏஐ நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.

இதுபோன்ற கருத்துகளின் மூலம் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலில் இருந்து இயங்கும் ஏராளமான சமூக வலைதள கணக்குகள், இந்த ரகசிய நடவடிக்கைகளுக்கான உள்ளடக்கங்களை உருவாக்கியும், எடிட் செய்தும் வந்தது அம்பலமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கங்கள் எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகள் மே மாத தொடக்கத்தில் இருந்து பார்வையாளர்களை குறிவைத்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ”சில அரசியல் கட்சிகளால் மேற்கொள்ளப்படும், வெளிநாட்டு தலையீடுகள், போலியான தகவல்கள் போன்வற்றுக்கு பாஜக எப்போதுமே வெளிப்படையான இலக்காக இருந்து வருகிறது. இது நாட்டின் ஜனநாயகத்துக்கு மிக ஆபத்தான அச்சுறுத்தல்’ என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

ட்ரம்ப் குற்றவாளி: குற்றவியல் வழக்கில் தீர்ப்பு

Next Post

உலக கோப்பை டி20 கிரிக்கெட்… இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் எவை தெரியுமா?

Next Post
உலக கோப்பை டி20 கிரிக்கெட்… இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் எவை தெரியுமா?

உலக கோப்பை டி20 கிரிக்கெட்... இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் எவை தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin