Tamilnadu
oi-Halley Karthik
சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 17வது கூட்டதொடரின் 3வது நாள் கூட்டம் இன்று கூடியிருக்கிறது. கூட்டத்தில் எங்களுடைய தயவில்தான் தற்போது ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், மின்வெட்டு பிரச்சனை குறித்தும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசியிருக்கிறார்.

எங்கள் தயவில்தான் ஆட்சி
தமிழக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எங்கள் தயவில்தான் தற்போது ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது என்று பேசியிருக்கிறார்
சட்டமன்றத்தில் சிரிப்பலை
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு குடிநீர் வழங்க, டம்ளருக்கு பதில் பாட்டில் பயன்படுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்த நிலையில், குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம், பாட்டில் கொடுக்கப்பட்டால் தூக்கி எறிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல.. அதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுபவம் இருப்பதால்தான் அப்படி சொல்கிறாரோ?” என்று கூற.. சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
பிரேமலதா விஜயகாந்த்க்கு பாடம் எடுத்த சபாநாயகர்

ஆளுநர் தனது உரையில், தமிழ் பெயர்களை சரியாக உச்சரிக்கவில்லை என தேமுதிக எம்எல்ஏ பிரேமலாத விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இதை மறுத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், வேறு மாநிலத்தை சேர்ந்த ஆளுநர், தமிழை பேச முயற்சித்ததையே நாம் பாராட்ட வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
ஆளுநர் உரை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரம் ஆளுநர் உரை, ஆளும் கட்சியை புகழந்துதான் இருந்தது. – பிரேமலதா விஜயகாந்த்
பேசி முடித்த மன்னார்குடி காமராஜ்
7 முறை பேச முயன்று, இறுதியாக கூடுதல் நேரம் கேட்டு 8வது முறையாக பேசிய முடித்தார் மன்னார்குடி எம்எல்ஏ காமராஜ்
ஒருவழியாக பேசிய காமராஜ் ஒவ்வொரு முறையும் அமமுக எம்எல்ஏ பேச காமராஜ் பேச முயன்றபோது குறுக்கீடுகள் எழுந்ததால், இறுதியாக 8வது முறையாக தற்போது காமராஜ் பேசி வருகிறார்.

ஒவ்வொரு முறையும் அமமுக எம்எல்ஏ பேச காமராஜ் பேச முயன்றபோது குறுக்கீடுகள் எழுந்ததால், இறுதியாக 8வது முறையாக தற்போது காமராஜ் பேசி வருகிறார்.
அலைக்கழிக்கப்பட்ட காமராஜ்
அமமுக எம்எல்ஏ காமராஜ் தொடர்ந்து பேச முயற்சிக்கையில், ஒவ்வொரு முறையும் முதலமைச்சருக்கு வாழ்த்து சொன்ன பிறகு, சபாநாயகர் குறுக்கீடு செய்து மற்ற உறுப்பினர்களை பேச அனுமதித்ததால் காமராஜர் பேச முடியாமல் போனது. இறுதியாக 7வது முறையாக காமராஜ் பேச முயன்றபோது திடீரென அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கீடு செய்ததால் காமராஜால் பேச முடியாமல் போனது.
இறுதியாக 8வது முறை, முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி காமராஜர் பேசி வருகிறார்
தளவாய் சுந்தரம் எதிர்ப்பு
மேகதாது அணை குறித்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், இடையில் வந்த திருத்தத்தைதான் எதிர்க்கிறோம். – தளவாய் சுந்தரம்
ஆதவ் அர்ஜுனா விளக்கம்
இப்போது இருக்கும் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதால்தான், புதிய ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று கோருகிறோம். எனவே எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று திருத்தத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. – ஆதவ் அர்ஜுனா
உச்சநீதிமன்றம் தீர்ப்பு பாதிக்கப்படாது

இப்போது கோரும் புதிய நடுவர் மன்றம் என்பது, தமிழகத்தின் உரிமையை பாதிக்காது. இது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
அமைச்சர் விளக்கம்
மேகதாது அணை – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
கூட்டணி கட்சிகள் போர்க்கொடி
உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத்தை ஏற்கொள்ளக்கூடாது என்று, தவெக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன்
திருத்தம் மீது விவாதிக்க அனுமதிக்கவில்லை. புதிய திருத்தம் தேவை இல்லை என சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் பேச்சு
மேகதாது குறித்து பேசுவதை ஏற்க முடியாது

திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், அப்போது குறுக்கீடு செய்யாமல் இப்போது வந்து மாற்றம் செய்ய கோருவது ஏற்க முடியாது. இனி மேகதாது குறித்து பேச வேண்டாம் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
பாமக எதிர்ப்பு
மேகதாது அணை குறித்து புதிய நடுவர் மன்றம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு. புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் தமிழகத்திற்கு பதிப்பு வரும் – பாமக எம்எல்ஏ
மேகதாது குறித்து பேச அனுமதி இல்லை!
புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். அந்த கோரிக்கை சேர்க்கப்பட்டு ஜூன்.19 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர் என்.ஆனந்த் விளக்கம். இனி மேகதாது அணை குறித்து பேச அனுமதி இல்லை என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு
புதிய நடுவர் மன்றம் – என். ஆனந்த விளக்கம்
புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அமைச்சர் என்.ஆனந்த் விளக்கம்
மேகதாது அணை – என்.ஆனந்த விளக்கம்

புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் திருத்தம் தொடர்பாக அமைச்சர் என். ஆனந்த் விளக்கம்
சபாநாயகர் விளக்கம் – திமுக ஏற்பு

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த திருத்தத்துடன், மேகதாது அணை தடுப்பு குறித்து முதலமைச்சரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக, சபாநாயகர் அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறோம் – திமுக கொறடா எ.வ.வேலு
உதயநிதியின் திருத்தம் – சபாநாயகர் விளக்கம்

திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து சபாநாயகர் விளக்கம். திருத்தத்துடன் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இப்போது பேசுவது ஏன்? அதைப்பற்றி பேசுவது உகந்தது அல்ல.
மேகதாது அணை – ஆதவ் அர்ஜுனா விளக்கம்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த திருத்தம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
எழுந்து நின்ற சபாநாயகர் – உச்சக்கட்ட பரபரப்பு
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுந்து நின்ற சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சட்டென எழுந்து நின்றதால் சலசலப்பு. சபாநாயகர் எழுந்து நிற்கும்போது அவை உறுப்பினர்கள் அமர வேண்டும் என்று பிரபாகர் வலியுறுத்தல்
வெளியே போங்க.. கண்சிவந்த சபாநாயகர்! அதிமுகவினர் வெளிநடப்பு
உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்தும், உடனே பேச அனுமதிக்கபடவில்லை என்று கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
திமுகவுக்கு பேச அனுமதி மறுப்பு

திமுக கொறடா எ.வ.வேலு பேசும்போது பாதியில் அமர சொன்ன சபாநாயகர். 110 விதியின் கீழ் பேச அனுமதியில்லை என்று கூறி, பேச அனுமதி மறுப்பு
விவாதம் கிடையாது

110 விதியின் கீழ் அறிக்கையை வாசித்த பிறகு விவாதம் கிடையாது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு. ஏற்கெனவே வினா-விடை கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு பேச அனுமதி மறுப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர் தொடர் அமளி. உறுப்பினர்கள், அமைச்சரின் பேச்சுக்கு பிறகு கருத்து தெரிவிக்கலாம் என்று சபாநாயகர் அறிவிப்பு. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் தொடர்ந்து பேச சபாநாயகர் உத்தரவு.
திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் கொந்தளிப்பு

அமோனியா வாயு கசிவு குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் 110 விதியின் கீழ் பேச முயன்றபோது, தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி. உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்று சபாநாயகர் வலியுறுத்தல்
எதிர்கட்சி உறுப்பினர்கள் கொந்தளிப்பு

அமோனியா வாயு கசிவு குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் விளக்கம். அமைச்சரின் விளக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கொந்தளிப்பு
செயல் வீரர்

முதலமைச்சர் விஜய் சொல் வீரர் அல்ல, செயல் வீரர் என்று சபாநாயகர் பாராட்டு
விஜய்க்கு வாழ்த்து
தமிழக முதல்வர் விஜய்க்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து
READ MORE

