Last Updated:
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜெர்மனியில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் ரயில் பெட்டிகள் சரிந்து சாலையில் விழுந்ததால் அதிர்வலைகள் ஏற்பட்டன.
மியூனிக் நகரில் நேற்று (ஜூன் 20) நள்ளிரவு 1.30 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஒரு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டு 15 அடி உயரத்தில் இருந்து சாலையில் விழுந்தன. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட பெட்டிகளை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.
A collision between two freight trains on a bridge in Munich, Germany, early Saturday morning has left one person dead, according to local police. The collision, which happened at around 1:40 a.m., caused two train cars to derail and fall onto the road below. A Munich Fire… pic.twitter.com/vP7kdrIm1o
— CBS News (@CBSNews) June 20, 2026
இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், ரயில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் முழுமையாக தெரியவரவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம்புரண்ட பெட்டிகளில் சரக்கு எதுவும் இல்லை என்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் ஜெர்மனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜெர்மனி: நேருக்கு நேர் மோதிய ரயில் பெட்டிகள்… சரிந்து சாலையில் விழுந்ததால் அதிர்ச்சி!


