• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கல்வித் தடைகளைத் தகர்க்கும் டிஜிட்டல் புரட்சி:  ‘பெராந்தி மகாசிஸ்வா’ திட்டத்தின் கீழ் 258 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது மித்ரா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கல்வித் தடைகளைத் தகர்க்கும் டிஜிட்டல் புரட்சி:  ‘பெராந்தி மகாசிஸ்வா’ திட்டத்தின் கீழ் 258 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது மித்ரா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பி40 இந்திய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ரா  தனது ‘பெராந்தி மகாசிஸ்வா’ திட்டத்தின் கீழ் ஜோகூர் மாநிலத்தில் நேற்று 258 புத்தம் புதிய அதிநவீன மடிக்கணினிகளை வழங்கியது. ஜோகூர், ஸ்கூடாயில் உள்ள மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (யு.டி.எம்) நடைபெற்ற இந்த நிகழ்வில், அப்பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட  துன் உசேன் ஒன் மலேசியா பல்கலைக்கழகம்,   கோலாலம்பூர் பல்கலைக்கழகம் (யுனி கே.எல்), சிட்டி பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர்.  டிஜிட்டல் வசதிகள் இன்றித் தவிக்கும் மாணவர்கள் தங்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடரவும், தொழில்நுட்ப உலகில் திறம்படப் போட்டியிடவும் இந்த உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையே மித்ராவின் புதிய அடையாளம்:

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மித்ராவின் தலைமை இயக்குனர் ரவீந்திரன் நாயர், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் வழிகாட்டலில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.  “ஜோகூர் மாநிலத்திலான இந்த விநியோகம் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது. பிற மாநிலங்களிலும் இத்திட்டம் மிக வெளிப்படையான,  சீரான முறையில் தொடரும். தகுதியான மாணவர்களுக்கு அரசின் உதவிகள் முறையாகச் சென்றடைவதை மித்ரா உறுதி செய்யும்” என்று அவர் தெரிவித்தார்.

பெரந்தி மகாசிஸ்வா திட்டத்தின் கீழ் 3,000 மடிக்கணினிகள்:

மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மேற்பார்வையில் மித்ரா முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், நாடு தழுவிய அளவில் தகுதியுடைய 3,000 இந்திய உயர்கல்வி மாணவர்கள் பயனடைவர்.  மித்ரா, மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட பிறகு, நிர்வாகத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பயனாளிகளின் பட்டியல், நிதி ஒதுக்கீடு,  திட்டங்களின் நிலை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் வெளியிடும் நடவடிக்கை, மித்ராவின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்: மே 10-ஆம் தேதி முதல்

இந்தத் திட்டம், கடந்த மே 10-ஆம் தேதி மலாயாப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.  அன்றைய நிகழ்வில், மித்ராவின் செயல்பாடுகள்,  வெளிப்படைத்தன்மையைப் பாராட்டிய பிரதமர், இந்திய சமூக மேம்பாட்டிற்கான நிதியை 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டார்.

மடானி நிர்வாகத்தின் தொலைநோக்குப் பார்வை:

மலேசியாவின் ‘மடானி’ கொள்கையானது, இனம், மதங்களைக் கடந்து விளிம்பு நிலையில் உள்ள அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சமத்துவ வளர்ச்சியை வலியுறுத்துகிறது.  இந்த அடிப்படையில், இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதார நிலையை உயர்த்துவதில் மித்ரா முக்கியப் பங்காற்றி வருகிறது.  அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் வழிகாட்டலில், இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொருளாதாரச் சுமையின்றி உயர்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதே மித்ராவின் முதன்மை இலக்காகும்.



Read More

Previous Post

PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு ப்ளாக் ஆயிடும்..ரேகை வைக்கலைனா காலி தான் | PHH, AAY Ration Card Holders Must Complete Biometric Verification Soon

Next Post

விசாரணைகளில் இருந்து தப்ப வெளிநாடு பறந்த எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி

Next Post
விசாரணைகளில் இருந்து தப்ப வெளிநாடு பறந்த எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி

விசாரணைகளில் இருந்து தப்ப வெளிநாடு பறந்த எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin