மதுரங்குளிய 10 கனுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடம் அங்குள்ள பணியாளர் கியூஆர் குறியீட்டைக் கேட்டதால் அவரை துரத்தித் தாக்கியதாக மதுரங்குளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிலையத்திற்கு வந்த இரண்டு இளைஞர்களிடம், எரிபொருள் நிரப்பும் பணியாளர் எரிபொருள் நிரப்புவதற்காக கியூஆர் குறியீட்டைக் கேட்டதாகக் கூறப்படுகிறது
மதுரங்குளியைச் சேர்ந்தவர்கள்
“தாங்கள் மதுரங்குளியைச் சேர்ந்தவர்கள் என்றும், தங்களிடம் என்ன கியூஆர் குறியீடு இருக்கிறது என்றும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், எரிபொருள் நிரப்பும் பணியாளரைத் துரத்தித் தாக்கினர்.”

இந்தச் சம்பவம் எரிபொருள் நிலையத்தின் சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது. மேலும், சந்தேக நபர்கள் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தலைக்கவசம் கூட அணியவில்லை
“தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் தலைக்கவசம் கூட அணியவில்லை என்றும், மது அருந்தியிருந்ததாகவும் எரிபொருள் நிலைய ஊழியர்கள் கூறுகின்றனர்.”

image credit -lankadeepa
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

