லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல், உலக அரங்கில் அமெரிக்கா கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற அதற்கு விருப்பமில்லை அல்லது அதற்கான தகுதி அதற்கு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் முக்கிய பேச்சுவார்த்தையாளரும், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது பாகர் கலிபாப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் படை நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு 15 பேர் காயமடைந்தனர்.
மென்மையான போக்கு
இது குறித்துத் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், இஸ்ரேல் அரசிடம் அமெரிக்கா காட்டும் மென்மையான போக்கை விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டு ஈரானிடம் சலுகைகளைப் பெற முடியாது எனத் தெரிவித்துள்ள கலிபாப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த ‘நல்ல காவல்துறை கெட்ட காவல்துறை நாடகம் இப்போது காலாவதியாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா தனது கடமைகளை நிறைவேற்றத் தவறினால் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது சாத்தியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

