இங்குள்ள எல்லைச் சோதனைச் சாவடியில், போலி ஹலால் சான்றிதழைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் 26 டன்னுக்கும் அதிகமான உறைவிக்கப்பட்ட கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமைத் தளபதி ஃபவ்சி யூசோஃப் தெரிவித்தார்.
இறக்குமதி முகவரால் சமர்ப்பிக்கப்பட்ட இறக்குமதி பிரகடனத்துடன் இருந்த ஹலால் சான்றிதழில் முறைகேடுகள் இருந்ததாக அவர் கூறினார். சான்றிதழில் உள்ள விவரங்கள் கணினி அமைப்பில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகவில்லை.
சமர்ப்பிக்கப்பட்ட ஹலால் சான்றிதழ் போலியானது என்பதை இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம் (JAKIM) பின்னர் உறுதிப்படுத்தியது.
உறைவிக்கப்பட்ட கோழி இறைச்சிப் பொதியை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட டிரெய்லர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஃபவ்சி கூறினார்.
-fmt
